வான் மூன்று – விமர்சனம்

மகன் விட்டுச் சென்று விட, உனக்கு நான் எனக்கு நீ என்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் 60வயதை கடந்த டெல்லி கணேஷ் மற்றும் லீலா தம்பதியினர். லீலாவிற்கு இதய கோளாறு ஏற்பட, ஆப்ரேஷனுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் டெல்லி கணேஷ். அப்போது இருக்கும் அவர்களின் அனுபவ காதல் எப்படி கைகொடுத்தது என்பதை காலம் கடந்த தலைமுறையாக காட்சிகளுக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தலைமுறைகளும் தங்களுக்கான காதல் எப்படி உலகில் உலாவிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகேஷ்..

 

ஒவ்வொரு காதலிலும் ஒருவிதமான ஈர்ப்பைக் கொடுத்து மிக அதிகமாகவே கவனம் பெற வைத்துவிட்டார் இயக்குனர். ஆதித்யாவிடம் முதியவர் ஒருவர் கூறும் காதல் என்றால் என்ன என்பது அல்டிமேட் வசனங்கள், யதார்த்தங்கள். கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது அனுபவ நடிப்பால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

அந்த ஒரு காட்சிக்காகவே இயக்குனருக்கு மிகப்பெரும் பூங்கொத்தை வழங்கலாம். காதலை காதலாகக் கூறி அதிகமாகவே ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஆபாசம் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை, அழகு காவியமாக படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *