‘மாநாடு’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

‘மாநாடு’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இடையில் சிறிது காலம் நிறுத்தப்பட்டது. அப்படத்தில் சிம்பு தொடர்ந்து நடிப்பாரா? படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படம் வெளியாகுமா? என்ற கேள்வியும், சந்தேகமும் அனைவரிடையே எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 144 தடை உத்தரவு நீங்கியதும் படப்பிடிப்பு முழுவீச்சில் நடத்தி முடிப்போம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும், இப்படம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *