பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை குறைக்க சதியா?

இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும்மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலக அளவில் 375 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 158 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் பொன்னின் செல்வன் கன்னடத்தில் மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. கன்னடத்தில் மட்டும் 15 கோடி ஷேர் வரும் என எதிர்பார்த்த நிலையில்தற்போது 10 கோடி வருவதை கஷ்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் கன்னடத்தில் சமீபத்தில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்துள்ளது. இதனால், அப்படத்தை பல்வேறு திரையரங்குகளில் ஓடவைக்க பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து “பொன்னியின் செல்வன்” படத்தை நீக்கி வருகிறார்களாம்.

மேலும், இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் கன்னடத்தில் வசூலில் குறைந்துள்ளது என்றும் இதன் பின் அரசியல் சதி இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்திலும் “காந்தரா” திரைப்படத்தை பல திரையரங்குளில் ரிலீஸ் செய்துள்ளார்கள். தமிழில் பெயர்த்து வெகு விரைவில் “காந்தாரா” திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

இந்த தகவலறிந்த பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *