நானே வருவேன் படத்தின் அப்டேட் கொடுத்த செல்வராகவன்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணி தான் ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ என மூன்று படங்களுமே இதுவரையிலும் பேசப்பட்டு தான் வருகின்றன. இதில் ‘காதல் கொண்டேன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ இருபடங்களுக்கும் இசையமைத்தது ‘யுவன் ஷங்கர் ராஜா’ என்பது குறிப்பிடதக்கது.

தற்போது மூன்றாவது முறையாக இணையும் தனுஷ்-செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா இவ்ரகளின் கூட்டணியில் மிகவும் எதிர்பார்புடன் உருவாகிவரும் படம் ‘நானே வருவேன்’.

இந்த படத்தை பற்றி சமீபத்தில் தனுஷ் கூறியபோது, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது எனவும். ஜனவரி மாத இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிக்கும் வகையில் திட்டம் இருப்பதாக தெரிவித்திருந்தார். ‘நானே வருவேன்’ படத்தில் நீங்கள் இருவேடங்களில் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது படத்தை பற்றி நான் எது பேசினாலும் எனது இயக்குனர் என்னை கொன்றுவிடுவார் என அந்த கேள்விக்கு பதிலளித்தார்.

இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன், ‘நானே வருவேன்’ படத்தின் இசைத்தொகுப்பு முடிந்தது என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் செல்பி எடுத்து பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தின் பொல்லாத உலகம் பாடல் தமிழ் சினிமாவில் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *