இந்திய இஸ்லாமியர்களுக்காக போராடுவேன் – ரஜினி திட்டவட்டம்

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நாடு முழுவதும் ஆங்காங்கே பல விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கூறியதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது நடத்தப்பட வேண்டும்.

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன. அதன் காரணமாக இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.

இதையும் மீறி இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போரடுவேன்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *