தண்டேல் விமர்சனம் – (3/5);

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ராஜு(நாக சைதன்யா). அதே சமூகத்தை சேர்ந்தவர் சத்யா(சாய் பல்லவி). மீனவரான ராஜுவும், சத்யாவும் காதலித்து வருகிறார்கள். தந்தையை போன்றே ராஜுவுக்கும் தலைமை குணம் இயற்கையாகவே இருக்கிறது. அதனால் சக மீனவர்கள் அவரை தலைவராக பார்க்கிறார்கள்.

இந்நிலையில் கிராமத்து மீனவர்களுடன் சேர்ந்து 9 மாத காலம் மீன் பிடிக்க கிளம்புகிறார் ராஜு. வேண்டாம் என சத்யா தடுத்தும் ராஜு கேட்கவில்லை. மீன் பிடிக்க சென்றபோது தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜு மற்றும் சக மீனவர்கள் நாடு திரும்புவார்களா என்பதே கதை.



முதல் பாதியில் மீன சமூகம், அவர்களின் அன்றாட கஷ்டங்கள், பழக்க வழக்கங்களை காட்டியிருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. ராஜு, சத்யாவின் காதலை அழகாக காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனை, ராஜு உள்ளிட்டவர்களுக்கு என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் மைனஸ் இல்லாமல் இல்லை. இருந்தாலும் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ராஜு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நாக சைதன்யா. தன் கெரியரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், எமோஷன், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். சாய் பல்லவி வழக்கம் போன்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாக சைதன்யா, சாய் பல்லவி இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் எதுவும் திணிக்கப்பட்டது போன்று தோன்றவில்லை. ஒளிப்பதிவாளர் ஷாம்தத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

– ஹேமலதா வாசுதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *