பிரைம் வீடியோ குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது.

டிரைலரை இங்கே காணவும்: https://www.youtube.com/watch?v=1X_iut1c4lo

“ஸ்வீட் காரம் காபி-ன் கதை தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. . மனிதர்கள் மேம்பாடடையும் போது , உறவுகளும் குடும்பமும் அதற்கிணையாக மேம்பாடு காணவேண்டும். அதில் ஒரு சிலர் ஆர்வத்துடன் அந்த மாற்றத்தில் ஒன்றிணைந்து கொள்கிறார்கள், வேறு சிலர் அதற்கான மனோ தைரியத்தை மெல்ல மெல்ல கந்தடைக்கிறார்கள், மேலும்  சிலர் கத்தி கூப்பாடு போட்டு சண்டைக்குச் செல்கிறார்கள். லட்சுமி மேடம் , மது மற்றும் சாந்தி போன்ற மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் மூலமும் மற்றும் அதற்கு சற்றும் குறையாத இந்தக் கடகியில் தங்களை முழுமையாக ஈட்படுத்திக் கொண்ட ஒரு மிகச் சிறந்த குழுவினருடனும் இணைந்து இந்த பலதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை, குறிப்பாக எனது முதல் வெளிப்புற படப்பிடிப்பில், புத்தாய்வு செய்தது இந்தத் தொடரைப் போலவே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதைக் கவரும் விதமாகவும் இருந்தது. என்று இதன் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது எபிசோடுகளின்  இயக்குனர் சுவாதி ரகுராமன் கூறினார்.

ஸ்ட்ரீமிங்கில் முதன் முறையாக அறிமுகமாகிய, இளமை மாறா நட்சத்திரமான லக்ஷ்மி கூறுகையில், “நான் பல பத்தாண்டுகள் நீடித்த  பிரபலமான தொழில் வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஸ்வீட் காரம் காபி மூலமான  எனது ஸ்ட்ரீமிங் அறிமுகம்  நிச்சயமாக சிறப்பான ஒன்றாக அமையும். சுதந்திரமான  மனப்பான்மை, சுதந்திரமான எண்ணங்கள்  மற்றும் உங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை என்ற அடிப்படையிதான் நாம் அனைவரும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் – சுந்தரி அவற்றை மிகச் சிறந்த வடிவத்தில் பிரதிபலிக்கிறது. பல வழிகளில் என்னை எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில்  ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது உண்மையிலேயே புத்துணர்ச்சியளிப்பதாக இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற , இந்தத் தொடரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *