முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென பேருந்தில் பயணம்

*திடீரென்று அரசு பேருந்தில் ஏறி பரபரப்பை கிளப்பிய முதல்வர்!*

*சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்.*

*டிரைவருக்கும் ஒண்ணும் புரியாமல் காரை நிறுத்தியுள்ளார். காரை விட்டு இறங்கிய ஸ்டாலின், விறுவிறுவென்று அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்ததால், பாதுகாப்பிற்கு கூட வந்த அதிகாரிகள் சற்றுநேரத்திற்கு திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

M 19-B தி.நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் திடீரென சென்று பார்வையிட்டார். அதில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சரை எதிர்பாராமல் திடீரென்று பார்த்ததும் பயணிகள் திகைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *