பெங்களூருவில் சவக்கிடங்கை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி – மருத்துவமனையில் பரபரப்பு

பெங்களூரு வில் ESI மருத்துவமனை சவக்கிடங்கை சுத்தம் செய்தபோது 15 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2020ஜூலை மாதம் கொரோனாவின் முதல் அலையின் பொது சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்த துர்கா மற்றும் முனிராஜ் என இரண்டு பேர் கொரோனா தோற்றால் ESI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்த நிலையில் உடல்கள் அங்குள்ள பழைய சவக்கிடங்கில் வைக்கப்பட்டது .

இதன் பின்னர் சடலங்கள் அங்கிருப்பதையே மருத்துவமனை நிர்வாகம் மறந்து போனதாக தெரிகிறது. இந்த சூழலில் சவக்கிடங்கை சுத்தம் செய்த போது தான் இந்த இரண்டு சடலங்கள் கிடந்தது தெரியவந்தது . உடலெங்கும் புழுக்கள் மொய்த்த நிலையில் கிடந்ததை கண்ட மருத்துவமனை தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *