வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் தாக்குதலால் ஒருவர் பலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று(பிப்14) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

இதன் தொடர்ச்சியாக, மண்ணடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எண்ணற்ற மக்கள் கலந்து கொண்டனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களை காவல்துறையினர் வன்மையாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் 70 வயது முதியவர் உயிரிழந்தார். 45 வயதுமிக்க ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். காவல்துறையின் இந்த வெறிச்செயலில் பொதுமக்கள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடினர்.

போலீஸ் தடியடியை கண்டித்து தூத்துக்குடியில் பள்ளிவாசல் எதிரே நூற்றுக்கணக்கானோர் திடீர் போராட்டம்.

காணொளிக்கு :👇

https://youtu.be/N6W_6WWhs-8

 

https://youtu.be/pqQscxtbFVM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *