கோலிவுட்டில் கெட்டிமேளம் கொட்டப் போகும் அடுத்த ஜோடி இவர்கள் தான்?

மீபத்தில் கோலிவுட் சினிமா வட்டாரம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ‘கௌதம் கார்த்திக்’ நடிகை ‘மஞ்சிமா மோகன்’ அவர்களின் திருமணம் தான்.

இவர்களுக்கு சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று பல பேர் நினைத்து வருகின்றனர்.

ஆனால், சமீபத்தில் வெளியான FIR படத்தின் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சியில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் FIR படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் வருகை தந்திருந்தனர்.

அப்போது அந்த சிறப்பு காட்சியை காண வந்த சிலர் மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து வந்தனர். அவர்களின் திருமண செய்தி வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று நினைத்து வந்த வேளையில் இவர்களின் வாழ்த்துக்கள் அது உண்மை தானோ? என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆனால், இதுவரை இரு தரப்புகளிலும் எந்த ஒரு மறுப்பு பதிவோ அல்லது உண்மை என்ற பதிவோ இதுவரை இல்லை.

இதற்கு முன்னதாக இவர்களின் திருமணம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடக்கலாம் என்று செய்திகள் வந்த நிலையில், இருவரின் வாழ்க்கையிலும் ஏப்ரல் மாதத்தில் முக்கியமான வேலைகள் இருப்பதாலும் இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம் என்றும் செய்திகள் இன்னமும் வந்த வண்ணம் உள்ளன.

எது எப்படி இருந்தாலும் இவர்களின் திருமண செய்தி அதிகார பூர்வமாக வெளிவரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.

ஆரம்பத்தில் நடிகர் அஜித் குமார் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா போன்ற ஜோடிகளின் திருமண செய்தியும் வதந்தியாக இருந்து தான் உண்மையானது. அது மட்டுமல்லாமல் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ‘தேவராட்டம்’ என்னும் படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *