BIG NEWS நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா காலமானார்

Actress Folk Singer Paravai Muniyamma passed away

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவர் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமானார். எனவே இவரை பரவை முனியம்மா என்ற அழைக்கத் தொடங்கினர்.

கிட்டதட்ட 30 ஆண்டுகள் நாட்டுபுற பாடல்கள் துறையில் கோலோச்சி வருபவர் இவர்.

தமிழத்தில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 50 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.

மேலும், கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியையும் டிவியில் நடத்தினார்.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.

சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாகவும் சினிமா வாய்ப்பு குறைந்து போனதாலும் வறுமையில் வாடினார்.

அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார்.

இவரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, அதன் வட்டித் தொகை இவருக்குக் கிடைப்பது போன்று அப்போதே செய்திருத்தார்.

சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

இதனையடுத்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர்.

நடிகர் சங்கமும் உதவித்தொகை வழங்கியது, சில சினிமா பிரபலங்களும் இவருக்கு உதவி செய்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பரவை முனியம்மா காலமானார்.

Actress Folk Singer Paravai Muniyamma passed away

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *