நடிகர் S J சூர்யாவின் நடிப்புக்கு ரெட் கார்டா?

சமீபத்தில் வெளியான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் S.J.சூர்யாவின் நடிப்பு பலராளும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் நடித்த டான் படத்திலும் இவரின் நடிப்பு மிக சிறப்பாகவே இருந்தது.

இந்நிலையில் S.J.சூர்யா இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், நாம் இணைந்து படம் பண்ணலாம் எனக் கூறி S.J.சூர்யா அவர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். சில சூழ்நிலை காரணங்களால் படங்களை இயக்காத S.J.சூர்யா அவர் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்கும் பொழுது, அந்த தயாரிப்பாளர் தற்போது வேண்டாம், நான் கேட்க்கும் நேரத்தில் தாருங்கள் என்று கூறியுள்ளாராம். இதனால் S.J.சூர்யாவும் சரி எனக் கூறியுள்ளார்.

சில வருடங்கள் கழித்து தற்போது அந்த தயாரிப்பாளர் அவர் கொடுத்த 1 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து பல மடங்கு கேட்கிறார். இதனால் கோபமடைந்த S.J.சூர்யா 1 கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன் எனக் கரராக சொல்லிவிட்டாராம். S.J.சூர்யாவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், அவரை படங்களில் நடிக்க விடாமல் செய்வதற்காக ரெட்-கார்டு கொடுக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என சவால் விட்டுள்ளார் S.J.சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *