ஷூட்டிங்கிற்கு வராத ஸ்டார் நடிகர் ; படத்தை விட்டு வெளியேறிய பூஜா ஹேக்டே ;

தென்னிந்திய திரைப்பட உலகில் தற்போது மிக பிரபலமாகவும், தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாகவும் வளம் வருபவர் பூஜா ஹேக்டே. கடந்த இரண்டு மாதத்திற்குள் இவர் கதாநாயகியாக நடித்த பீஸ்ட், ராதே ஷியாம், ஆச்சாரியா, F3 போன்ற படங்கள் வெளிவந்தன. இது தவிர தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹேக்டே. தற்போது, தெலுங்கு மொழியில் இயக்குனர் ஹரிஷ் ஷங்கரின் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் “பாவதீயுடு பகத் சிங்” படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் பூஜா ஹேக்டே.

இந்நிலையில் பூஜா ஹேக்டே அந்த படத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வருவதாலும், படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்கள் தாமதமாக்குவதாலும் இந்த முடிவை பூஜா ஹேக்டே எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், சமீபத்தில் பவன் கல்யாண் கம்மிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பிற்கு அவர் மிக தாமதமாக வருகிறார் என்றும் சில நாட்கள் படப்பிடிப்பிற்கு அவர் வருவதை விட்டுவிட்டு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றும் பல குற்றச்சாட்டுகள் பவன் கல்யாண் மீது எழுந்த வண்ணமுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *