‘பெப்சி’ அமைப்பிடம் ரூ.1 கோடி வழங்கிய ‘லைகா’!

திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக., ரூ.1 கோடி நிதி !

– ‘பெப்சி’ அமைப்பிடம் வழங்கிய ‘லைகா’ !!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், அதன் நிறுவனர் சுபாஸ்கரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் .ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் .ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வழங்கினார்.

லைகா நிறுவனத்தின் இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன், பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், ‘இசைஞர்’தினா, ஜெ.ஸ்ரீதர், அசோக் மேத்தா, எஸ்.செந்தில்குமார், புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *