ரசிகர்களை ஏமாற்றிய ஷங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பணியாற்ற ஒப்பந்தமும் ஆகியுள்ளார். ஹிந்தியில் ரன்வீர் சிங்க்(ஐ) வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளார். அதற்கு முன் நடிகர் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC 15 எனும் தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறாராம் ஷங்கர்.

இப்படத்தை தெலுங்கில் மிக பெரும் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தில் ராஜு தயாரிக்கிறார், பிரபல ஒளிப்பதிவாளர் திரு(எ)திருநாவுக்கரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ராம் சரணுக்கு 15 ஆவது படமான இது தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு 50 ஆவது படமாகும். இந்த படத்தின் இசைக்காக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யத்துள்ளார், இவர் இதற்கு முன்னதாகவே வினய் விதேய ராமா என்னும் படத்தில் ராம் சரணுடன் நடித்திருக்கிறார், இப்படத்தில் நடிகர் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனமான S pictures மூலம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வழியாக புதிய வெப் சீரிஸ் தயாரிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இறைவி, N.G.K, இறுதிச்சுற்று, கோலமாவு கோகிலா படத்தின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒப்பந்தமாகிவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராம் சரண் படத்தை இயக்கும் இந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் முடிவு ரசிகர்கள் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *