தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அ.தி.மு.க. இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சோரகையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு அங்கு செல்லும் முதலமைச்சர், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *