மீளுமா ஸ்டோன் பெஞ்ச்; ரிலீஸுக்கு முன்பே தோல்வியை உறுதி செய்யும் “டிஎஸ்பி”;

 

விஜய் சேதுபதி தன் கைவசம் இப்போது நிறைய படங்களை வைத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது விஜய் சேதுபதியின் 46 ஆவது படமான “டிஎஸ்பி” படம். நாளை, டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி படத்துக்கு உள்ள ஆரவாரம் டிஎஸ்பி படத்திற்கு இல்லையாம்.

காரணம், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், கடைசி விவசாயி, மாமன்னன் போன்ற அடுத்தடுத்து தோல்வி படங்களை தந்தது தான். இதில் கடைசி விவசாயி மட்டும் விமர்சக ரீதியாக வெற்றியடைந்த படம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் நடித்து வெளியான சேதுபதி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலும் டிஎஸ்பி ஆக தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்போது இந்த படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும் முன் பதிவு மந்தமாக உள்ளது. பல திரையரங்குகள் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலைமையும் கூட.

இதற்கான காரணம் என்னவென்றால், டிஎஸ்பி படத்தின் ப்ரோமோஷன் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த படவிழாவில் உலக நாயகனே கலந்து கொண்டாலும் மக்கள் மத்தியில் இந்த படம் சென்றடையவில்லை.

மேலும், ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் வெளியான கன்னட படங்களான, அவனே ஸ்ரீமன் நாராயணன், சார்லி 777, போன்ற சூப்பர் ஹிட் படங்களும் தமிழில் வசூல் செய்யாமல் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, #VJS46 அதாவது “டிஎஸ்பி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், படம் எதிர்பார்த்தது போல் இல்லாத காரணத்தால் படத்தை வாங்க மறுத்துவிட்டாராம் கலாநிதி மாறன் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்தின் கருத்து.

இதனால் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் வெளியாவதற்கு முன்பு தோல்வி உறுதியாகியுள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். விஜய் சேதுபதி இதிலிருந்த எவ்வாறு மீண்டு வரப்போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்தச் செய்தி விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.