“யாமம்” திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது !!

தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார்.

K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் K C பிரபாத் “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவுபடப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் K C பிரபாத் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *