மெமரீஸ் திரைவிமர்சனம்

ஷியாம், பிரவீன் என இரண்டு இயக்குனர்கள் இயக்கத்தில் வெற்றி, பார்வதி அருண் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் “மெமரீஸ்”.

கதைப்படி,

நான்-லீனியர் கதையாக ஆரம்பிக்கும் இப்படத்தின் கதையானது, நாயகன் வெற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அக்கதையில் வரும் கதாபாத்திரமான வெங்கி, தனது நினைவுகளை இழந்து தான் யார் என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் ஓடுகிறார். அவரை சுற்றியுள்ளவர்கள் வெங்கி இரண்டு கொலை செய்துவிட்டதாகவும், சுய நினைவை இழந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

பின்னர், ஓரு சில நினைவுகளை மீட்டெடுக்கும் வெங்கி, அவர் கொலை செய்யவில்லை என்றும். அவரை சுற்றி சூழிச்சி நடக்கிறது என்பதையும் உணர்கிறார்.

வெங்கி தான் உண்மையான குற்றவாளியா? அவரை எதற்காக கொலை குற்றத்தில் சிக்க வைக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கான பதில் இரண்டாம் பாதி.

4 பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் வெற்றி. முந்தைய படங்களை விட இப்படத்தில் அவரின் நடிப்பு ஓகே தான்.

கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் பார்வதி அருண்.

இரண்டு இயக்குனர்கள் இணைந்து இப்படத்தின் கதையை உருவாகியிருந்தாலும் அவர்களின் இயக்கம் அமெச்சூராகவே இருக்கிறது.

முதல் படம் என்றாலும், கமெர்சியல் படத்தை இயக்காமல். ரிஸ்க் எடுத்து, ஒரு எக்ஸ்பிரிமெண்டல் படத்தை இயக்கியதற்கு பாராட்டுக்கள்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *