சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் சிபிராஜ். ஒரு முறை ஒரு கொலையை கண்டுபிடிக்க புது யுத்தியை கையாண்டு அதில் வெற்றி அடைகிறார். அதேபோல ஒரு சவாலை மீண்டும் சந்திக்க நேர் இருக்கிறது. ஓடும் பேருந்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட அந்த கொலையை 10 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் தான் அது.
சிபிராஜ் அந்த கொலையை கண்டுபிடிக்க தொடங்கும் போது இருந்து பல இன்னல்களும் தடங்கல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் அந்த கொலை யார் செய்தது? எதற்காக செய்தார்கள்? என்று கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
சிபிராஜ் ஒரு இரவுக்குள் நடக்கும் கதை என்பதால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கதாபாத்திரத்தில் இருந்து சற்றும் விலகாமல் வசனம் உச்சரிப்பில் இருந்து அனைத்தையும் கச்சிதமாக சிறப்பாக செய்திருக்கிறார். உடன் நடித்த கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பா, முருகதாஸ், திலீபன், உதயா தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் அவரவர் பாத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இளையராஜா கலியபெருமாள் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். கதையும் அது செல்லும் விதமும் நன்றாக இருக்கிறது. ஜெய் கார்த்திக் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்திருக்கிறார்.
டென் ஹவர்ஸ் – பரபரப்பு திரில்லர்