அப்பா, மூன்று மகன்கள். அப்பா மிகவும் கண்டிப்பான பேர்விழி. ஊட்டியில் சொந்தமாக பள்ளிக்கூடம் ஒன்றை நடத்துகிறார். இவருடைய மனைவி பிரிந்து வாழ்கிறார். ஒருமுறை தனது ஷூவை வளர்ப்பு நாய் கடித்து விட்டதால் அதை அடித்து விடுகிறார். இதைப் பார்த்த கோபத்தில் அப்பாவிடம் அதுவரை பயந்து இருந்த பிள்ளைகள் எதிர்த்து நின்று அம்மாவிடம் வந்து சேர்கிறார்கள். ஆனால் அம்மாவின் வறுமை அவர்களை பள்ளியில் சேர்க்க போதிய பணம் இல்லாததால் மீண்டும் அப்பாவிடமே வருகிறார்கள்.
நன்றாக வருமானம் வந்த பள்ளியில் திடீரென்று வருமானம் குறைய வறுமையில் வாழ்கிறார்கள். வீட்டில் கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லாமல் இருட்டிலேயே வருகிறது. தண்ணீரும் வராததால் ரொம்ப தொலைவு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இறுதியில் அம்மா இவர்களிடம் வந்து சேருவாரா அல்லது பிள்ளைகள் அப்பாவிடம் இருப்பார்களா மீண்டும் பள்ளியை நன்றாக நடத்தி வெற்றியடைவாரா என்பதை படத்தின் மீதி கதை.
இவ்வளவு கண்டித்துடன் குழந்தைகளிடம் இருக்க வேண்டுமா என்று கோபப்பட செய்யும் அப்துல் ரபீக் இறுதியில் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்கும் பொறுப்பில் இருந்து சிறிதும் பிறழாமல் நம்மை நிகழ வைத்து இருக்கிறார். மிதுன், ரித்திக் மோகன், நிதின் மூவரும் அனைத்து வீட்டிற்கு வேலைகளையும் செய்யும் பொழுதும் அப்பாவிற்கு பயப்படும் பொழுதும் தங்களுடைய பாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
வேத் சங்கர் சுகவனம் தேவையான இடத்தில் மட்டும் இசையை சேர்த்து யதார்த்தமாக கொடுத்திருக்கிறார். அவினாஷ் பிரகாஷ் படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவு செய்ய ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கிறார்.
நாங்கள் – எப்போதும் ஒற்றுமையுடன்..