49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் வெளியிட்ட விஜய் மில்டனின் காதல் கவிதைகள் நூல்

49வது புத்தக கண்காட்சியில்

 

விஜய் மில்டனின் காதல்

கவிதைகளானது

49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து

விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது.

காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா,

இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது.

 

ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி,

கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள

போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.

புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார்,

 

” இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,’ரோஜா கனவு’, ‘வெள்ளைப் புறாக்கதை’ போன்ற பலவிதமான கவிதைகளை இதில் முயன்று பார்த்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்”.

 

மனுஷ்ய புத்திரன்

 

“விஜய் மில்டனின் கவிதைகள், காதலின் தீராத பிரார்த்தனை களாலானவை. கால காலமாய் எந்த தெய்வமும் இரங்கிடாத

பிரார்த்தனைகள் அவை. அந்த பிரத்யேக மொழியின் சொற்களாக அது உருவாக்கம் கனவுகளே இருக்கின்றன. அந்தக் கனவுகளின் மொழிபெயர்ப்பே மில்டனின் இக்கவிதைகள்.”

 

இயக்குனர் ரா.பார்த்திபன்

 

” காதல் உணர்வுகளை, காதலித்தவர்கள் யாரும் காதலிக்காமல் இருக்க முடியாது. அல்லது இந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் காதல் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவாவது காதலிக்கத் தொடங்குங்கள்”.

 

இயக்குனர் அகத்தியன்

 

“கவிஞர் வார்த்தைகளுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கரிக்காமல் இயல்பான காதலின்பத்தோடு

இந்தப் புத்தகம் முழுவதும் ஒரு நல்ல காதலின் வெளி-உள் அனுபவங்களை உணரச் செய்திருக்கிறார்.”

 

இயக்குனர் பிருந்தா சாரதி

 

” ‘ கொலுசுகள் பேசக்கூடும்’ என்று மில்டன் சொல்லும்போது,

‘கொலுசுகள் பேசுமா?’ என்று யாருக்கேனும் சந்தேகம் வருமா? கேட்பவர் நுட்பமான காதுகள் கொண்டவராக இருந்தால், அது பேசும். சொற்களை புரிந்துகொள்ள முடியும்.”

இந்த புத்தகம் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று

ஊடகங்களிலும்,வலைதளங்களிலும் பேசுபொருளாயிருக்கிறது.