‘வல்லமை’ திரை விமர்சனம் 4/5

பிரேம்ஜி தன்னுடைய எட்டு வயது மகளுடன் வசித்து வருகிறார். அவர் பள்ளியில் பெரும் பணக்காரர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் நன்கொடை பள்ளிக்கு அளித்துள்ளார். அவரை பாராட்டி நடக்கும் விழா ஒன்றுக்காக பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். அதைக் காண தன் அப்பாவை கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறுகிறார். ஆனால், பிரேம்ஜியின் இரண்டு சக்கர வாகனம் பழுதாகி விடுவதால் அவரால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அன்றே பிரிஞ்சியின் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்து விடுகிறது. சிறு வயது முதலே தன் பெண்ணிற்கு எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார் பிரேம்ஜி. இந்த வன்கொடுமை நடந்த விஷயத்தை தன் அப்பாவிடம் கூறுகிறார். இருவரும் ஒரு ஒரு கட்டமாக யோசித்து எங்கு இந்த வன்கொடுமை நடந்திருக்கும்? யாரால் நடந்திருக்கும்? என்று கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்கள்? மேலும் அந்த வன்கொடுமை செய்தவரே கொலை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள். இறுதியில் அது யார் என்று கண்டுபிடித்தார்களா அவரை கொலை செய்தார்களா என்பது தான் படத்தின் மீதி கதை.

இவ்வளவு சிறிய பெண்ணிற்கு இந்த விஷயத்தை முழுவதுமாக சொல்வது சரிதானா என்ற கேள்வி வந்தாலும், பெண் பிள்ளைகளை பாதுகாப்பாகவும் அதே சமயம் வன்கொடுமை செய்தவரை நிச்சயம் தண்டிக்கவும் வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது. சிறிய குழந்தைக்கு நடக்கும் கொடுமைக்கு இந்த தண்டனை சரிதான் என்ற எண்ணமும் வருகிறது. அனைத்து பெற்றோருக்கும் விழிப்புணர்வு கொடுக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கிறது.

இது போல் உலகெங்கும் வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருவதால், கொலைக்கு பதிலாக வேற ஏதாவது செய்தி இருக்கலாமே என்று எண்ணம் தோன்ற மறுக்கிறது. ஏனென்றால் சட்டம் ரீதியாக இவர்களை தண்டிக்க முடியாது மீண்டும் வெளியே வந்து இவர்கள் இதை தான் செய்வார்கள். இருப்பினும் பாதிக்கப்பட்ட அனைத்து சாமானிய மக்களும் இதை துணிந்து செய்வார்களா என்பது கேள்விக்குறி தான்.

பிரேம்ஜி பொறுப்புள்ள அப்பாவாக விவேகமாக இந்த விஷயத்தை தன் நடிப்பால் மிக அழகாக கையாண்டு இருக்கிறார். திவதர்ஷினியும் தன்னுடைய பாத்திரத்தை மிகவும் பொறுப்புடன் செய்திருக்கிறார். தீபா சங்கர், வழக்கு எண் முத்துராமன், CR ரஜித், சூப்பர் குட் சுப்பிரமணி, சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன் ஆயிரம் தங்களது கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

சமுதாயத்துக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரேம்ஜியின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை அழகாக இயக்கியிருக்கிறார் சண்டை பயிற்சி இயக்குனர்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கருப்பையா முருகன். மேலும், இவரே பாடல்கள் எழுதியும் இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிகேவி இசையமைத்திருக்கிறார். எஸ் கே அஜய் கலை இயக்குனராகவும், சி. கணேஷ் குமார் எடிட்டராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளை எஸ் ஆர் ஹரி முருகன் இயக்கியிருக்கிறார். பாடல்களை வெங்கட் பிரபு பாடி இருக்கிறார்.

வல்லமை – பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு நிச்சயம் தேவை.